Friday, July 23, 2010

தோழா

என் வாழ்க்கை நீ வாழ பழகி கொண்டாய்
உன் நடைமுறை நான் தெரிய விளக்கி சொன்னாய்

உன் அறிமுகத்தால்...
உன்னை நேசித்தேனா அறியவில்லை
என்னை நேசிக்க கற்றுக் கொண்டேன்!

என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்
என்னை யாரென்று எனக்கே சொல்லி கொடுத்தாய்!
என்னிடம் நீ பேசிய தருணங்களை விட
எனக்காய் நீ வாதாடிய தருணங்கள் ஏராளம்!

நம் நட்பு 
முதலுமில்லாமல் முடிவுமில்லாமல் ...

உள்ளங்கள் புரிந்து கொள்ளும் இவ்வுறவிற்கு
உள் அர்த்தம் தேவையில்லை!

காலம் பாராமல் நாம் பரிமாறிக்கொள்ளும் வார்த்தைகள்
நேரமரியாமல் நாம் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள்
ஓர் வாழ்க்கை பருவத்தில் அடங்கி விடாது!!!

No comments: