Tuesday, August 23, 2011

தொலைந்த நொடி

உனக்குள்ளே தொலைந்த நொடியும் 
உன்னை தொலைத்த நொடியும்
மறக்குமேயானால்

என் கவிதை கிறுக்கலே 
நான் எவ்வாறு வாழ்ந்திருப்பேன்?



அன்பு


அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாள் 
உண்டென்று கண்டேன் உன்னிடம்
எனக்காக நீ என்னை பிரிந்த நாட்களில்...



Friday, May 27, 2011

எனக்கானவன்

என்னை அழ வைப்பதும் நீதான்
என் அழுகையினிடையில் என் கண் துடைத்து
என்னை சந்தோஷ படுத்துவதும் நீதான் !

Monday, May 9, 2011

சொல்லு பொறுக்காம போனவனே


ஒத்த சொல்லு பொறுக்காம பொசுக்குனு போனவனே
பெத்த தாயி படும்பாட்ட கொஞ்சம் நீ கேக்கலயோ??

குனிஞ்சா நிமிந்தா உன் உசிரு போயிருமோன்னு 
அசையக் கூட பயந்து மெல்லமா நானசஞ்சேன் 

வித விதமான சோத்துக்காக நான் ஏங்கும் காலத்துல
பொறக்காத புள்ளைக்கு ஒத்துக்குமான்னு மருத்துவச்சி உசிரெடுப்பேன்

என் உடம்பு நோவ நீ வெளி வர துடிச்சப்போ
புள்ள நீ சுகமா இருக்க அய்யனார வேண்டிகிட்டேன்

உனக்கான பசி நேரத்துல என் மார நீ மிதிக்க 
பசி பொறுக்காத உன் குணத்த பாத்து உச்சி மொகந்துக்கிடேன்
என் பசி தூக்கம் பொறுத்துக்கிட்டேன்

காட்டு வேலைக்கி போன உங்கப்பன் 
போனவரு மொத்தமா போயே சேர
எம்புள்ள உனக்காக என் துக்கம் தாங்கிகிட்டேன்
எனக்குள்ள அடச்சுக்கிடேன்

வீட்டு வேல தவற வேறறியா என் கைய
மொறட்டு வேலைக்கும் பழகிகிட்டேன் 
எம்புள்ள எதிர்காலம் நினைச்சு என் மனச தேத்திக்கிட்டேன்

படிக்காத உங்கப்பன் ஆயி போல நீ இருக்க கூடாதின்னு
உசுர் நோவ பாடுபட்டு உன்ன பள்ளிக்கூடம் சேர்த்து விட்டேன்

இந்த ஊரு பள்ளிக்கூடம் நல்லா இல்லைன்னு நீ சொல்ல கேட்டு
கடன் வாங்கி டவுனுல சேத்து விட்டேன் 

படிச்சவன் நீ அங்கயே வேல பாக்க
எம்புள்ள ஒசந்துட்டானு சந்தோசமா சாமிக்கு பொங்கல் வெச்சேன்

உன் கலியாணத்த நடத்தி பாக்க ஊரு ஊரா
பொண்ணு தேடி நான் திரிஞ்சேன்
பெத்த புள்ள என் வாக்க தட்ட மாட்டான்னு
ஊருக்குள்ள உன்ன பத்தி பெருமையா பேசிகிட்டேன்

ஒரு டவுனு புள்ளைய கூட்டியாந்து
இவதான் என் பொண்டாட்டின்னு வந்து நின்ன
பெத்த பாசம் ஒரு பக்கம் அவமானம் ஒரு பக்கமினு
பொறுக்க முடியாம உன் தாயி செத்தா போயிட்டான்னு நானும் கேட்டேன்

ஒத்த சொல்லு பொறுக்காம  பொசுக்குனு போனவனே...

உன் தாயி நெசமாவே சாக போறேன்

உசிரு ஏங்கிகிட்டு துடிக்குதுன்னு
மருத்துவச்சி சொல்லிட்டு போறா
என் ஏக்கம் உனக்காகதான்னு புரியலையோ???

பெத்த ராசா கடசியா உன்ன பாக்க
உசிர கையில புடிச்சுகிட்டு நானிருக்கேன்
சிரமப் பட்டு என் சாவ தள்ளிக்கிட்டு இருக்கேன்

உனக்காக எவ்வளவோ செஞ்ச தாயி
கடசியா எனக்காக ஒன்னே ஒன்னு கேட்டுக்கறேன்

உன் கோபத்த மூட்ட கட்டி
என்ன ஒரு தடவ பாத்துட்டு போ
என் உசிர நிம்மதியா அனுப்பிட்டு போ!!!