Thursday, February 14, 2008

காதல் எனது பார்வையில்....

காதலை எனது பார்வையில் கூற
நான் ஒன்றும் ஞானி அல்லவே

பின்பு ஏன் காதலை பற்றி
எனது பார்வையில் கூற வந்தேன்???


எனது இந்த சொற்கள் காதலை
விமர்சனம் செய்ய அல்ல!

காதல் என்ற ஒன்று என்னுள் எவ்வெவ்வாறு
உருமாறியதென்பதை கூறவே வந்தேன்!


என் பள்ளி வயதில்...

காதல் என்றால் வெறுப்பு
காதல் என்றால் பிரிவு
காதல் என்றால் பிரச்சனை

விவரமரியா அந்த பருவத்தில்
காதலை அனைவரும் காதலிக்கும் அப்பருவதில்

காதல் எனக்கு வெறுப்பாய் போனது !!!


கல்லூரி வயதில்...

காதல் என்றால் காமம்
காதல் என்றால் பைத்தியகாரத்தனம்
காதல் என்றால் சலிப்பு

உலகம் அறிய ஆசைப்படும் அந்த பருவத்தில்
அனைவரும் காதலின் காலடியை தேடும் அப்பருவத்தில்

காதல் என்பது எனக்கு சுமையாய் ஆனது !!!


அடுத்த நான்கு வருடத்தில்...

காதல் என்றால் வீண் வேலை
காதல் என்றால் பொழுது போக்கு
காதல் என்றால் விதண்டாவாதம்

உலகம் அறிந்த அந்த வயதில்

அனைவரும் காதலின் சுகம் காணும் அவ்வயதில்
காதல் என்பது எனக்கு வேடிக்கையாய் போனது !!!

இன்றோ...

காதலின் சுகம் புரிய முயற்சி செய்கிறேன்...
காதலின் கணம் கண்டு கலவரமடைகிறேன்...
காதலின் உண்மை அறிய அவா கொள்கிறேன்...

அன்று வேடிக்கை போன காதல்
அன்று சலிப்பை தோன்றிய காதல்
அன்று வெறுப்பாய் தோன்றிய காதல்

இன்று...???

5 comments:

Rajasekar said...

Good Try. Sorpizhai illamal irunthirunthal nanraga irunthirukkum

David said...

Good One have great soul,but poetic touch is missing.I am not a serious poem writer but i am a crazy reader.

களப்பிரர் - jp said...

நன்று !!!

Poornima Magadevan said...

Thanks all. this is not written as a poem, just a feel of love

Rama said...

Unnoda Kadala pathine 'context based 'definitions romba nalla iruku Poornima!